ஊவா மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டியில் பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட மடுல்சீமை வெறலபத்தன தமிழ் வித்தியாலயம் (ஆரம்ப பாடசாலை) பசறை வலய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
அதன்படி முதலாம் பிரிவில் வாசிப்பு போட்டியில் செல்வி.
ஐ.பிரித்தீஷா முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளார். முதலாம் பிரிவில் பாவோதல் போட்டியில் செல்வி. டீ.மிருந்தா இரண்டாமிடத்தையும், வில்லுப்பாட்டு திறந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களான ஐ.பிரித்தீஷா,
ஆர்.கனுஷான், பி.லுக்சான், வீ.ஹரிவர்ஷன், கே.சுதேஷன், எம்.மதுஷான் மற்றும் ஜெ. பிரதிஷ்டன் ஆகியோர் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். குறைந்த வளங்களுடன் கஷ்டப் பிரதேச பாடசாலையிலிருந்து போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்துவதாக பாடசாலை அதிபர் ஆ.ரமேஷ் தெரிவித்தார்.
(பசறை நிருபர்)