Friday, March 29, 2024
Home » சாவகச்சேரியில் 100 வருடங்கள் பழமையான வேப்பமரம் முறிந்தது

சாவகச்சேரியில் 100 வருடங்கள் பழமையான வேப்பமரம் முறிந்தது

by mahesh
October 4, 2023 9:19 am 0 comment

யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகரில் ஏ- 09 வீதியை அண்டியிருந்த 100 வருடங்கள் பழைமை வாய்ந்த வேப்பமரமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (10) காலை திடீரென முறிந்து விழுந்துள்ளது.

இந்த வேப்பமரமானது, மின்சார வயர்களை அறுத்துக்கொண்டு வீதியில் விழுந்த போதிலும், சம்பவ வேளையில் வீதியால் எவரும் பயணிக்காமையால், எந்தவித உயிர் ஆபத்துகளும் ஏற்படவில்லையென, பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த மர நிழலில் அமைக்கப்பட்டிருந்த லொத்தர் ரிக்கெட் விற்பனை நிலையம், மோட்டார் சைக்கிளொன்று, மின்சாரத் தூண்கள் சேதமடைந்துள்ளன.

இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்த சாவகச்சேரி பொலிஸார், உரிய அதிகாரிகளின் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி, சிறிது நேரத்தில் போக்குவரத்தை சீர்செய்தனர்.

சாவகச்சேரி விசேட, யாழ்.விசேட நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT