புனித ரபீவுனில் அன்னல் மாதத்தை முன்னிட்டு மன்னார் தீவுப் பகுதியில் கடந்த 28.09.2023 அன்று இஸ்லாமிய மாணவர்களுக்கு நடைபெற்ற மார்க்கம் சம்பந்தமான பேச்சு , கவிதை , பாடல் மற்றும் குர்ஆன் மனனம் போன்ற போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஞாயிற்றுக் கிழமை (01.10.2023) மாலை 3.30 தொடக்கம் 7 மணி வரை மன்னார் எருக்கலம்பிட்டி ஸயீதிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கொழும்பு அயன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் ஏ.டபிள்யூ.நஜீப் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் மற்றும் மன்னார் முல்லைத்தீவு அபிவிருத்தி குழுத்தலைவர் அல்ஹாஜ் கே.மஸ்தான் கலந்து கொண்டார்.
இதன்போது சிறப்பு பேச்சாளராக எருக்கலம்பிட்டி ஸயீதிய்யா அரபுக்கல்லூரி அதிபர் அல்ஹாஜ் அஷ் ஷேஹ் அல் ஆலிம் எம்.கே.நூறுல்லாஹ் அவர்கள் திகழ்ந்தார்.
பாடசாலை மாணவர்களின் இந் நிகழ்வுக்கு மன்னார் தீவிலுள்ள அதிகமான இஸ்லாமிய பெற்றோர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
(தலைமன்னார் விஷேட நிருபர் )