அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்க உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கத்தைத் தவிர்க்கும் தற்காலிக உடன்பாட்டில் உக்ரைனுக்கான ஆறு பில்லியன் டொலர் கூடுதல் உதவி சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அதை ஒட்டி ஜனாதிபதி பைடன் பேசினார்.
குடியரசுக் கட்சியின் தீவிரப் போக்குடைய உறுப்பினர்கள் சிலர் உக்ரைனுக்குக் கூடுதல் இராணுவ உதவி வழங்குவதை எதிர்க்கின்றனர்.
போர் குறித்த பைடனின் அணுகுமுறையையும் அவர்கள் ஏற்கவில்லை. ஆனால், அமெரிக்காவிடமிருந்து உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவு கிடைக்கும் என்று பைடன் குறிப்பிட்டார்.
எந்தச் சூழலிலும் உக்ரைனுக்கான உதவி தடைப்படுவதை அனுமதிக்கப் போவதில்லை என்றார் அவர்.
உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா 46 பில்லியன் டொலர் இராணுவ உதவியை வழங்கியுள்ளது.