Friday, March 29, 2024
Home » மட்டு கடற்கரை கால்பந்து

மட்டு கடற்கரை கால்பந்து

by sachintha
October 3, 2023 3:02 pm 0 comment

சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் நடாத்திய கடற்கரை கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் பெண்கள் பிரிவில் பன்சேனை இளைஞர் விளையாட்டுக் கழகமும் ஆண்கள் பிரிவில் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகமும் வெற்றியீட்டின.

கல்லடி கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற இந்தப் போட்டியில் 24 ஆண்கள் அணியும் 4 பெண்கள் அணியும் பங்கேற்றன. இதில் பெண்கள் பிரிவில் தன்னாமுனை புனித ஜோசப் விளையாட்டுக் கழகம், அம்பலாந்துறை கதிரவன் விளையாட்டுக் கழகம் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தன.

ஆண்கள் பிரிவின் 2ஆம் இடத்தை இக்னேசச் அணியும் 3ஆம் இடத்தை லைட்ஹவுஸ் விளையட்டுக் கழகமும் வென்றன.

முள்ளிப்பொத்தானை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT