அகில இலங்கை வை. எம்.எம். பேரவையின் டொக்டர் ஏ.எம்.ஏ. அஸீஸ் ஞாபகார்த்த கால்பந்தாட்ட வெற்றிக் கிண்ணத்தை வை.எம்.எம்.ஏ. ஏறாவூர் அணி முதல் தடவையாக தனதாக்கிக் கொண்டது.
அகில இலங்கை வை.எம்.எம். பேரவையின் திருகோணமலை மாவட்டப் பணிப்பாளர் எம்.எம். முக்தார், திருகோணமலை மாவட்ட வை.எம்.எம்.ஏ. கிளைகள் மற்றும் பேரவை இணைந்து தேசிய ரீதியில் வை.எம்.எம்.ஏ.கள் கலந்து கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (01) நடைபெற்றது.
இதில் வை.எம்.எம்.ஏ. வம்மானைக்கு எதிராக 2–1 என்ற கோல் கணக்கில் வை.எம்.எம்.ஏ. ஏறாவூர் அணி வெற்றி பெற்றது.
மூன்றாமிடத்தை வை.எம்.எம்.ஏ. புத்தளம் அணி கைப்பற்றியது.
ஒலுவில் கிழக்கு தினகரன், ஏறாவூர் சுழற்சி நிருபர்கள்