Thursday, April 25, 2024
Home » சமையல் எரிவாயு விலைகளில் திருத்தம்

சமையல் எரிவாயு விலைகளில் திருத்தம்

எதிர்வரும் 4ம் திகதி மேற்கொள்ள முடிவு

by damith
October 2, 2023 6:20 am 0 comment

சமையல் எரிவாயுவின் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை திருத்தங்களை எதிர்வரும் 4ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் லிற்றோ கேஸ் நிறுவனமானது சமையல் எரிவாயுவின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டதுடன் அதற்கிணங்க

12 .5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 145 ரூபாவால் அதிகரித்திருந்தது. எவ்வாறெனினும் இம்முறை உலகச் சந்தையில் நிலவும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப உள்நாட்டில் அதன் விலைகளில் சிறிய அளவில் அதிகரிப்பொன்று மேற்கொள்ளப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT