Friday, March 29, 2024
Home » நிலையான புத்தாக்கத்தின் 25 ஆண்டுகள் நிறைவை TEG குழுமம் கொண்டாடுகிறது

நிலையான புத்தாக்கத்தின் 25 ஆண்டுகள் நிறைவை TEG குழுமம் கொண்டாடுகிறது

by Rizwan Segu Mohideen
September 6, 2023 11:21 am 0 comment

Tropicoir Lanka (Pvt) Ltd, Euro Substrates (Pvt) Ltd மற்றும் Growrite Substrates (Pvt) Ltd ஆகியவற்றை உள்ளடக்கிய TEG குழுமம், நிலையான புத்தாக்கத்தின் முன்னோடி என்ற ரீதியில் தனது 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறது. 1998 ஆம் ஆண்டு Tropicoir Lanka (Pvt) Ltd நிறுவனத்தை நிறுவியதிலிருந்து இந்த குழுவானது தென்னை மட்டைகளைப் பயன்படுத்தி, குறிப்பாக தென்னை நார் அடி மூலக்கூறுகளை புதுப்பிக்கத்தக்க வளமாக, உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை தயாரிப்பதகான அதன் உறுதிப்பாட்டில் உறுதியாக இருந்து வந்துள்ளது. இந்தத் தயாரிப்புகள் இன்று உலகளவில் தோட்டக்கலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் செல்லப்பிராணிகளின் படுக்கை தயாரிப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

 TEG குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி/நிர்வாகப் பணிப்பாளர், தினேஷ் பெனாண்டோவின் தொலைநோக்குப் பார்வை காரணமாக நிறுவப்பட்ட இந்நிறுவனம், அனைத்து பங்குதாரர்களுக்கும் மிக உயர்ந்த நன்மதிப்பை உருவாக்கும் நோக்குடன், ஒரு சிறிய குழுவாக, அசைக்க முடியாத நோக்கத்துடன் தனது பயணத்தைத் தொடங்கியது. இன்று, இந்தக் குழுமமானது அதன் நிலையான நடைமுறைகள் மற்றும், புத்தாக்கம் காரணமாக ஒரு தொழில்துறை முன்னோடியாக உயர்ந்து நிற்கிறது. 

2000 ஆம் ஆண்டில், புத்தாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான அதன் அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக, TEG குழுமமானது நெதர்லாந்தின் Vander Knaap குழுமத்துடன் கூட்டு சேர்ந்தது. இதன் விளைவாக 2000 ஆம் ஆண்டில் Euro Substrates (Pvt) Ltd மற்றும் 2006 இல் Growrite Substrates (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் நிறுவப்பட்டன (BOI அங்கீகாரம் பெற்ற). இந்த கூட்டணியானது தொழில்துறையில் பல புரட்சிகரமான மாற்றங்களுக்கு வழி வகுத்ததோடு மட்டுமல்லாது, அதன் அளவு மற்றும் புத்தாக்கத் திறன் காரணமாக உலகளாவிய ரீதியில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாகவும் விளங்கியமை குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக, TEG இன் தென்னை நார் சார்ந்த தயாரிப்புகள் நிலையான பயிர் சார்ந்த தீர்வுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இலங்கையின் தென்னை நார் தொழில்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சூழலியல் தடயங்களைக் குறைப்பதற்கும் பங்களிக்கின்றன.

மேலும், 2011 ஆம் ஆண்டில், Tropicoir நிறுவனமானது கனடாவின் Premier Tech நிறுவனத்துடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு அற்புதமான தயாரிப்பாக, கழிவு நீர் சுத்திகரிப்புக்கான coir chips இனை உருவாக்கியது. இந்த கண்டுபிடிப்பு நிலையான வளர்ச்சிக்கான புதிய எல்லைகளை உருவாக்கியதோடு, பூமியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஒரு முக்கியமான படியாகவும் அமைந்தது. பல ஆண்டுகளாக, TEG குழுமமானது 40இற்கும் அதிகமான நாடுகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட தென்னை நார் அடி மூலக்கூறு தயாரிப்புகளை கொண்ட 2000 க்கும் மேற்பட்ட சரக்கு கொள்கலன்களை அனுப்புவதன்மூலம் உலகின் எல்லாக் கண்டங்களிலும் தனது செல்வாக்கை நிலைநிறுத்தியுள்ளதன்மூலம் இலங்கைக்கு பாரிய அளவிலான அந்நிய செலாவணியை ஈட்டித் தந்துள்ளது. 

வணிக ரீதியாக இந்நிறுவனம் அடைந்துள்ள வெற்றுக்கு மேலதிகமாக, இந்தக்குழுமம் அதன் பல்வேறு CSR முயற்சிகள் மூலமும் சமூகத்தில் ஒரு முத்திரையை பதித்துள்ளது. குறிப்பாக, TEG குழுமமானது நாட்டின் பின்தங்கிய மக்களுக்கு 85இற்கும் அதிகமான வீடுகளை நிர்மாணித்துள்ளதோடு, பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் ஆகியவற்றைப் புனரமைத்து, மற்றும் Growrite English and ICT Academy ஊடாக மாணவர்களை வலுவூட்டியுமுள்ளது. அத்தோடு, குளியாப்பிட்டிய பிரதேசத்தில் 85 குழந்தைகளை பராமரிக்கும் இரண்டு குழந்தைகள் காப்பகங்களை இந்நிறுவனம் நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்குழுமம் இலங்கையில் 1,300 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புக்களையும் 2,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு  மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளதோடு நாடு முழுவதும் ஆறு உற்பத்தி நிலையங்களை இயக்குகிறது. அத்தோடு மட்டுமல்லாது, இக்குழுமம் அதன் வலையமைப்பை இந்திய துணைக் கண்டத்திலும் விஸ்தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

TEG குழுமத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தினேஷ் பெர்னாண்டோ, அவர்,அவரது வணிகம், அதன் பங்குதாரர்கள் மற்றும் அவர்கள் அடைந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கையில், “எமது பயணமானது நீடிப்புத்திறன் மற்றும் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில்  நாம் கொண்டுள்ள அர்ப்பணிபு ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது. TEG குழுமதத்தின் திடமான அர்ப்பணிப்பு மற்றும் எமது பங்காளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோரின் மாறாத ஆதரவிற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். சமூகத்தில் ஒரு பிரச்சனையை தீர்க்க உதவுவதன் மூலம், அனைத்து பங்குதாரர்களுக்கும் மகத்தான நன்மதிப்பை எம்மால் உருவாக்க முடிந்தது. நாம் எல்லோரும் ஒன்றாக, பசுமையான மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கான விதைகளை விதைத்துள்ளதில் பெருமை கொள்கிறோம். இரண்டரை தசாப்தங்களாக மக்களை வலுவூட்டல், பூமியைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், மற்றும் இலங்கைக்கு தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டுதல் போன்றவற்றில் நாம் எட்டிய ]சாதனைகளால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எமது எதிர்காலத்தை நோக்கி நாம் நம்பிக்கையுடன் பார்க்கும்போது, எங்கள் இலக்கில் நாம் உறுதியாக இருக்கிறோம்.”

இந்தச் சிறிய திருத்தமானது எமது அறிக்கையின் ஓட்டம் மற்றும் ஒத்திசைவை மேம்படுத்தும் அதே வேளையில் எமது உண்மையான உணர்வையும் பராமரிக்கிறது. இது எமது குழுமத்தின் சாதனைகளை தாழ்மையான முறையில் எடுத்துரைக்கும் அதேவேளை எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும்  வெளிப்படுத்துகிறது. அத்தோடு,  அவர்களது பணி மீது அவர்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் மேலும் வலுப்படுத்துகிறது.

இந்த நெறிமுறையால் உந்தப்பட்டு, TEG குழுமத்தின் “அனாகதய வவமு” (எங்கள் எதிர்காலத்தை வளர்ப்போம்) திட்டமானது வள நிலைத்தன்மைக்கான எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. நாடு முழுவதும் 150,000 தென்னை மரங்கள் நடப்பட்டு, 2027 ஆம் ஆண்டளவில் 500,000 மரங்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சியானது சுற்றுச்சூழலை பாதுகாப்பது மட்டுமன்றி இளைய தலைமுறையினரிடையே சுற்றுச்சூழல் தொடர்பான  பொறுப்புணர்வை வளர்ப்பதற்கும் உதவுகிறது.

செயல்முறை மற்றும் தயாரிப்பு புத்தாக்கத்தில் 25 வருட நிபுணத்துவம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த பங்காளர்களின் வலுவான வலையமைப்புடன், TEG குழுமமானது நிலையான தென்னை நார் தீர்வுகள் மூலம் உலகளாவிய தோட்டக்கலை துறையில் புரட்சியை ஏற்படுத்த தயாராக உள்ளது. TEG குழுமம் இப்போது அடுத்த 25 ஆண்டுகள் மற்றும் அதற்கு அப்பால் அதன் கவனத்தை செலுத்தி பசுமைப் பொருளாதாரத்திற்கான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

TEG குழுமம் பற்றி
Tropicoir Lanka (Pvt) Ltd., Euro Substrates (Pvt) Ltd., மற்றும் Growrite Substrates (Pvt) Ltd. ஆகியவற்றை உள்ளடக்கிய TEG குழுமமானது, தென்னை நார் உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ளதோடு, தோட்டக்கலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் செல்லப்பிராணிகள் படுக்கை ஆகிய சந்தைகளுக்கான நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. 25 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டு, TEG குழுமமானது வரவிருக்கும் தலைமுறைகளுக்கு பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை வடிவமைப்பதில் உறுதியாக உள்ளது. 1300 க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்களுடன், அதன் மதிப்புகள், உயர்ந்த தரம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெற்றிகரமாக சேவை செய்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT