341
கொரோனா வைரஸை விட அடுத்ததாக வரவுள்ள கொடிய வைரஸால் 05 கோடி பேர் இறக்கலாமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வரவிருக்கும் கொடிய வைரஸுக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தப் பெயரும்
சூட்டப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது. தற்போது இத்தொற்று சற்று குறைந்து, மக்கள் வாழ்க்கை நிலை சகஜமாகியுள்ளது.
இந்நிலையிலேயே, கொரோனா வைரஸை விட கொடிய வைரஸ் பாதிப்பு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.