Thursday, April 18, 2024
Home » சுமார் 6 கி.கி. நிறை கொண்ட தங்கத்துடன் 4 சந்தேகநபர்கள் கைது

சுமார் 6 கி.கி. நிறை கொண்ட தங்கத்துடன் 4 சந்தேகநபர்கள் கைது

- 30 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் தங்க நகைகள் மீட்பு

by Rizwan Segu Mohideen
September 27, 2023 3:23 pm 0 comment

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 6 கி.கி. நிறை கொண்ட 30 தங்க பிஸ்கட்டுகளுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (27) முற்பகல் துபாயில் இருந்து இலங்கை வந்த FZ 569 மற்றும் UL 226 ஆகிய விமானங்களில் பயணித்த 4 பயணிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் 3 பேர் பெண்கள் எனவும் ஒருவர் ஆண் எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த தங்கத்தின் பெறுமதி ரூ. 123 மில்லியன் (ரூ. 1 கோடி 23 இலட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT