அழுத்கமையில் இருந்து பேருவளை_மருதானை வீதியூடாக புதிய பஸ் சேவையொன்று அளுத்கமை இ.போ.ச பஸ் டிபோவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் சேவை ஆரம்ப நிகழ்வில் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைத் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேருவளை அமைப்பாளருமான பிரசன்ன சஞ்சீவ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பேருவளை அல் பாசியதுள் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் மஸ்னவியா ரிப்கான் தலைமையில் பிரதம அதிதி, பஸ் டிப்போ அதிகாரிகள் உட்பட பிரமுகர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. மேற்படி பாடசாலை மாணவிகளின் தேவை கருதி பாடசாலை அதிபர் மஸ்னவியா ரிப்கான், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கம் மற்றும் ஊர்மக்களின் பலமாத வேண்டுகோளின் பேரில் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தலைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பேருவளை அமைப்பாளருமான பிரசன்ன சஞ்சீவவின் முயற்சியால் இந்த பஸ் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்ெகாள்ளப்பட்டது.
இந்த பஸ் சேவையூடாக அல் பாஸியதுன் நஸ்ரியா மகளிர் கல்லூரி மற்றும் அல் பாஸியதுன் நஸ்லியா ஆண்கள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் பயனடைவார்கள்.
ஏற்கனவே இவ்வீதியூடாக பஸ்சேவை நடைபெற்று வந்த போதிலும், இடையில் நிறுத்தப்பட்டது. பின்னர் 9 வருடங்களுக்கு பின் மீண்டும் இந்த பஸ் சேவையை ஆரம்பித்தமைக்காக மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
பேருவளை பீ.எம் முக்தார்…?