Friday, March 29, 2024
Home » சச்சித்ர சேனநாயக்கவுக்கு பிணை

சச்சித்ர சேனநாயக்கவுக்கு பிணை

by gayan
September 26, 2023 5:37 am 0 comment

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சித்ர சேனநாயக்க பிணையில் விடுதலை பெற்றுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் நேற்று (25) அவருக்கு பிணை வழங்கப்பட்டது. விளையாட்டுத் துறை அமைச்சின் சிறப்பு விசாரணைக் குழுவில் சரணடைந்ததை அடுத்து கடந்த செப்டெம்பர் 6 ஆம் திகதி முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சச்சித்ரர் கைது செய்யப்பட்டார்.

2020இல் நடைபெற்ற லங்கா பிரிமியர் லீக் போட்டியின்போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட முயன்றதாகவே சச்சித்ர மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் இந்தத் தொடரின்போது டுபாயில் இருந்து இரு வீரர்களைத் தொடர்பு கொண்டு ஆட்ட நிர்ணயம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

எனினும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கும் சச்சித்ர சேனநாயக்க, இது தனது மற்றும் தனது குடும்பத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT