கொரோனா தொற்றிலிருந்தும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்தும் படிப்படியாக மீண்டுகொண்டிருக்கும் நாட்டில் மீண்டும் இந்து – பௌத்த மக்களிடையே கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருகின்றனர். இதனை தடுப்பதற்கான நடைமுறைகளை நீதி அமைச்சு மேற்கொண்டு நிரந்தர சமாதானத்தை கொண்டுவர வேண்டுமென, சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபு சர்மா கேட்டுக்கொண்டார்.
இந்து – பௌத்த மக்களின் உறவை குழப்புவதற்கு எவரும் முயற்சிக்க வேண்டாமெனவும், அவர் கேட்டுக்கொண்டார். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சமாதான தின நிகழ்வு மஹரகமவில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் பிரதம அதிதியாக விஜேயதாச ராஜபக்ஷ கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, அமைச்சின் செயலாளர் வசந்தா மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.