Thursday, March 28, 2024
Home » சிவாஜிலிங்கம் நேற்று பிணையில் விடுவிப்பு

சிவாஜிலிங்கம் நேற்று பிணையில் விடுவிப்பு

by gayan
September 23, 2023 6:00 am 0 comment

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று (22) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் திலீபனின் 33ஆவது நினைவு தினத்தையிட்டு 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட குற்றச்சாட்டுக்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் நீதிமன்றம் அப்போது தடை உத்தரவு பிறப்பித்திருந்து. இருந்த போதிலும், நீதிமன்ற உத்தரவை மீறி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றச்சாட்டுக்காக சிவாஜிலிங்கத்தை கைது செய்யுமாறு கொழும்பு, மேல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு வந்த போது, குற்றம் சாட்டப்பட்ட சிவாஜிலிங்கம் தமது சட்டத்தரணிகளினூடாக நீதிமன்றில் சரணடைந்தார்.

இதன்போது, சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பிடியாணை உத்தரவு திரும்பப் பெறப்பட்டதுடன், பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT